திருவள்ளூர்: பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், வெள்ளியூரில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகள் என 126 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குனர் எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழுதலைவர் ஜெயசீலி ஜெயபாலன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்க்கத்துல்லாகான், மாவட்ட கவுன்சிலர்கள் டி.தென்னவன், இந்திரா பொன்குணசேகர், கால்நடை மருத்துவர்கள் வெங்கட்ரமணன், பொற்கொடி, கார்த்திகேய பிரபு, லோகநாதன், அருண், கீதா, செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.