சித்த மருத்துவ பல்கலை. அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை; சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துளோம். தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் போன்று அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனம் அமைக்கப்படும். எனவும் கூறினார்.

Related Stories: