கள்ளக்குறிச்சி : கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை திறக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியை உடனடியாக திறக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஜூலை 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து கனியாமூர் பள்ளியில் கடந்த ஜூலை மாத, 17ம் தேதி மிகப்பெரும் கலவரம் மூண்டது. கலவரத்தில் பள்ளியின் கட்டிடங்கள், வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை முற்றிலும் சேதம் அடைந்தது. பள்ளியில் வகுப்புகள் நடக்கமுடியாத சூழலில் ஆன்லைன் முறையிலும், சில வகுப்புகளுக்கு வேறு பள்ளிகளிலும் பாடம் எடுக்கப்பட்டு வருகிறது.