காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஏகனாபுரம் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கருத்துகேட்க தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை கையகப்படுத்துவதில் விவசாயிகளுக்கும் அரசுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளும், பொதுமக்களும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை.