மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்பட்டது. இதை காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து படாளம் கூட்டு சாலை வழியாக வேடந்தாங்கல் வரை அரசு பேருந்து இயங்கி வந்தது இந்தப் பேருந்தை பாப்பநல்லூர், பழத்தோட்டம், திட்டாளம் கூட்டு சாலை உள்ளிட்ட கிராமங்களின் வழியாக எல்.எண்டத்தூர் வரை வழித்தடம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக அப்பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர் இதனை அடுத்து அந்த வழித்தடங்களில் உள்ள கிராமங்களை இணைக்கு வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பம்பையம்பட்டு கிராமத்தில் நேற்று நடந்தது.