ஆவடி: புதுமைப்பெண் கல்வித்திட்டத்தில் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்து கொண்டார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமை பெண் திட்டத்தின்படி கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார். இந்நிலையில், இதன் முதல்கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 18 கல்லூரியை சேர்ந்த 754 மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஆவடி அடுத்த இந்து கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது, `பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். அப்படிப்பட்ட பெண்கள் மற்றும் மாணவிகள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிலையில் கல்வி ஊக்கத்தொகையாக ரூ.1000 கல்லூரி மாணவிகளுக்கு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.