உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் நேற்று மாலை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதன்படி பொது இடங்கள், பள்ளி, பொது நிறுவனங்கள், பொது கழிவறைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், பள்ளி-கல்லூரிகளில் சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.