கேப்டன் படத்தில் விசித்திர விலங்கு ஆர்யா தகவல்

சென்னை: ஓடிடியில் வெளியான ‘டெடி’படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம், ‘கேப்டன்’. இதில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ், ஆர்யாவின் தி ஷோ பீப்புள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், வரும் 8ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது: ஹாலிவுட்டில் உருவாகும் படங்களுக்கு இணையாக ‘கேப்டன்’படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் விசித்திரமான விலங்கு மற்றும் கடினமான கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டது.

 கதைக்கு தேவையில்லாமல் ஒரு காட்சியும்  இருக்காது. கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். ஒவ்வொரு காட்சியும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. ‘சூப்பர் மேன்’,‘ஸ்பைடர் மேன்’போல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. நான் நடித்து வெளியான ‘டெடி’,‘சார்பட்டா பரம்பரை’ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் இருந்தன. அதுபோல், ‘கேப்டன்’படமும் கோலிவுட்டில் மிகப்பெரிய புதிய முயற்சியாக இருக்கும். பெரியவர்களை மட்டுமின்றி சிறுவர்களையும் இப்படம் பெரிதும் கவரும். ஸ்டுடியோக்களில் மட்டுமின்றி, அடர்த்தியான காடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.

Related Stories: