காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டை படவேட்டம்மன் கோயில் அருகே உள்ள சாலையில் கோயில் திருவிழா நடத்த ஏதுவாக தனியாரால் போடப்பட்டுள்ள முள்வேலியை அகற்றி சாலையை மீட்டுத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம், அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டை மேட்டுத்தெருவில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர், சாலையின் அருகே உள்ள காலிமனையின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று ஏற்கனவே உள்ள குறுகிய சாலையை அகலப்படுத்தி பெரிய சிமெண்ட் சாலையாக மாற்றிக் கொடுத்தார்.