சென்னை: திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது மோகனுக்கும், கலைஞர் விருது டி.ஆர்.பாலுவுக்கும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: 2022ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது மோகனுக்கும், கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.,க்கும், பாவேந்தர் விருது திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படும்.