ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் பூங்கா சீரமைப்பு பணிகளை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கி வைத்தார். ஆவடி மாநகராட்சி நிர்வாகம் சமீபகாலமாக பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே உள்ள பூங்காக்களை சீரமைத்து நவீனப்படுத்தும் திட்டம் வகுத்துள்ளது. அந்த வகையில் இதன் முதல்கட்டமாக திருமுல்லைவாயல் சாலையில் உள்ள பூங்காவை ஆவடி மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் புனரமைப்பு செய்து அங்கு அலங்கார செடிகள், செயற்கை நீரூற்றுகள், விளையாட்டுத்திடல் தவிர, பூங்காவைச்சுற்றி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.