ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு போக்குவரத்து பனிமனையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர மாநிலமான புத்தூர், திருப்பதி, காளஹஸ்தி, நகரி என 36 பஸ்கள் இயக்கப்படுகிறது. ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வருவார்கள். அங்கிருந்துதான், தாங்கள் பணிபுரியும் இடங்களான கோயம்பேடு, செங்குன்றம், பாரிமுனை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பஸ் பிடித்து இங்கிருந்து வேலைக்கு செல்வது வழக்கம். இதில், பள்ளி நேரம் மற்றும் பள்ளி விட்டு வீடு திரும்பும் போதும் பெரியபாளையம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.