விருத்தாசலம்: உளுந்தூர்பேட்டை- விருத்தாசலம் சாலையில் மங்கலம்பேட்டை அருகே சமத்துவபுரத்திலிருந்து தொடங்கி சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மங்கலம்பேட்டையை சேர்ந்த விவசாயி முகமது அலி(63) என்பவரிடம் சுமார் 50 சென்ட் நிலத்தை நெடுஞ்சாலை துறையினர் கையகப்படுத்தினர். பலருக்கு இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கவில்லை. தொடர்ந்து முகமது அலிக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் இருந்து வந்தனர்.