சென்னை: பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது தொடர்பான வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு போலீஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரவாயல் கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசினார். இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டார்.