சென்னை: ஆஸ்கரை மிஞ்சும் அளவுக்கு நடிகர் ஓ.பன்னீர்செல்வம். அவர் நடிக்கப் போய் இருந்தால் ரஜினி, சிவாஜி தோற்றுப் போய் இருப்பார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மைதானத்தில் மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அதோடு வீரர்களுடன் கால்பந்தாடி மகிழ்ந்தார். பிறகு அவர் அளித்த பேட்டி: உசிலம்பட்டி எம்எல்ஏ ஓபிஎஸ் பக்கம் இணைந்தது அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை. சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரிடம் அதிக பணம் உள்ளது. மூவரும் பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை தான் செய்து வருகின்றனர். பணம் பாதாளம் வரை பாயும் என்ற வேலையைதான் தற்போது அவர்கள் செய்து வருகின்றனர்.