சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்த இளையராஜா

சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜா தற்போது உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து இசை கச்சேரி நடத்தி வருகிறார். அந்த வரிசையில் அவர் அடுத்து ஹங்கேரி நாட்டில் இசை கச்சேரி நடத்துகிறார். இதற்காக நேற்று அவர் சென்னையில் இருந்து ஹங்கேரி செல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு புறப்படும் விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அவர் ஹங்கேரி செல்வதாக பயணத் திட்டம் இருந்தது.

ஆனால் கன மழை காரணமாகவும், விமானத்தின் ஓடுபாதையில் மழை நீர் தேங்கி நின்றதாலும் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 7 மணி நேரம் தாமதமாக துபாய் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் இளையராஜா சென்றார். 7 மணி நேர தாமதம் காரணமாக இளையராஜா டென்ஷனாக காணப்பட்டதாக உடன் சென்ற பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: