அண்ணாநகர்: அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சந்தீப்குமார் (30). கடந்த 2018ம் ஆண்டு ரவுடி ஆதித்யாவை வெட்டி கொலை செய்த வழக்கில் அல்லிகுளம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். பின்னர், அண்ணாநகர் மடுவங்கரை பகுதியில் ஆட்டோவில் சென்றபோது 10 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, தப்பி சென்றது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 30க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். 2 உதவி ஆணையர்கள், 7 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.