சென்னை: பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்த இரண்டு பேர் மீது மாநகராட்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை பயன்படுத்த கட்டணம் பெற்ற இரண்டு நபர்கள் மீது காவல்துறையில் மாநகராட்சி புகார் அளித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலத்தில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலித்த 2 நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.