ஆம்பூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் ஐடி சோதனை நிறைவுபெற்றது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வருமானவரித்துறை பல்வேறு தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23ம் தேதி ஃபரிதா குழுமத்திற்கு தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி சோதனை நடைபெற்றது. மேலும், ஃபரிதா குழுமம் தொடர்புடைய அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களின் வீடுகள், அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. மட்டுமல்லாமல், வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்றது.