சென்னை: கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு அணைகள் கட்டுவதை கைவிட வலியுறுத்தி பாமக அறப்போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக சார்பில் ஆகஸ்ட் 30ம் தேதி அறப்போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டு உழவர்கள், பொதுமக்களின் நலனுக்கு எதிராக ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் ஒப்புதலை பெறாமல் அணைகளை கட்ட முடியாது; ஆந்திர அரசின் அத்துமீறலை அனுமதிக்க முடியாது என கண்டனம் தெரிவித்திருக்கிறார்.