வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

பொன்னேரி: வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வட சென்னை அனல் மின் நிலையம். இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் என மொத்தம் 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 1வது நிலையில் உள்ள 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அலகில் உள்ள டர்பன் குழாய், கொதிகலன் குழாய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முழுமையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Related Stories: