ஆவடி: ஆவடி ஆணையரக நுழைவு வாயிலில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதையடுத்து ஆவடி காவல் ஆணையருக்கு உட்பட்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆணையத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய வாயலில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருசக்கரவாகனம், ஆட்டோ, கார், பஸ் மற்றும் லாரி என அனைத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.