சென்னை: ஒடிசா மாநிலம், சாம்பலூர் பகுதியை சேர்ந்தவர் மேகா (29). இவர், பிஎச்டி முடித்துவிட்டு, சென்னை ஐஐடியில் கடந்த மாதம் 3 மாத ஆராய்ச்சி பயிற்சிக்கு வந்தார். ஐஐடி அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடன் படிக்கும் தோழியை பார்க்க நேற்றுமுன்தினம் ஆவடிக்கு மின்சார ரயிலில் மேகாஸ்ரீ சென்றார். அவரை பார்த்துவிட்டு, மீண்டும் ரயிலில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில், ஆவடி-இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் வந்தபோது, திடீரென ஓடும் ரயிலில் இருந்து மேகா தவறிவிழுந்தார்.