ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஐஐடி மாணவி பலி

சென்னை: ஒடிசா மாநிலம், சாம்பலூர் பகுதியை சேர்ந்தவர்  மேகா (29). இவர், பிஎச்டி முடித்துவிட்டு, சென்னை ஐஐடியில் கடந்த மாதம்  3 மாத ஆராய்ச்சி பயிற்சிக்கு வந்தார். ஐஐடி அருகிலேயே வீடு எடுத்து  தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடன் படிக்கும் தோழியை  பார்க்க நேற்றுமுன்தினம் ஆவடிக்கு மின்சார ரயிலில் மேகாஸ்ரீ சென்றார். அவரை  பார்த்துவிட்டு, மீண்டும் ரயிலில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார்.  இந்நிலையில், ஆவடி-இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில்  வந்தபோது, திடீரென ஓடும் ரயிலில் இருந்து மேகா தவறிவிழுந்தார்.

இதில்  தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து  ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மேகாஸ்ரீயின்  சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். புகாரின்பேரில் எஸ்ஐ  சுந்தர்ராஜன் தலைமையில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயில்  இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தாரா அல்லது அவரை வேறு யாரேனும் கீழே  தள்ளி விட்டார்களாக என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: