கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகளவில் உலா வருகின்றன. அத்துடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் லாஸ் காட் கங்கா காம்பவுண்டு பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளில் காட்டு மாடுகள் புகுந்தன. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடி, அருகிலுள்ள இடங்களுக்குள் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டுமாடுகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.