கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு மாடுகள்: மக்கள் அலறியடித்து ஓட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகர் மற்றும் சுற்றுலா பகுதிகளில் காட்டு மாடுகள் அதிகளவில் உலா வருகின்றன. அத்துடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளையும் தாக்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் லாஸ் காட் கங்கா காம்பவுண்டு பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள முக்கிய சாலைகளில் காட்டு மாடுகள் புகுந்தன. இதனால்  பொதுமக்கள் அலறியடித்து ஓடி, அருகிலுள்ள இடங்களுக்குள் தஞ்சமடைந்தனர். தகவலறிந்து வந்த  வனத்துறையினர் காட்டுமாடுகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினசரி கொடைக்கானல் நகரின் பல்வேறு இடங்களில் காட்டு மாடுகள் உலா வருவதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், மாணவ- மாணவிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு வனத்துறையினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து நகரில் உலா வரும் அனைத்து காட்டு மாடுகளையும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நிரந்தரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: