உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வரதராஜன் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாதி, இன, வட்டார, மதம் அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.