செங்கல்பட்டு: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்தியாவின் 76வது பவளவிழா சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியோர் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தன. இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டு தனியார் மண்டபத்தில் நடந்தது.