அரசு ஊழியருக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் அரசாணைகள் வெளியாகும்: அரசு அறிவிப்பு

சென்னை: தலைமைச் செயலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின்  ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதலே உயர்த்தி  வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வர் 75வது சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி ஜூலை 1ம் தேதி முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்.

Related Stories: