சென்னை: ஐ.எப்.எஸ். நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 முகவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தலைமை முகவர் சரவணன் என்பவரை கைது செய்யப்படிருக்க கூடிய நிலையில், தற்போது 6000 கோடி ரூபாய் மோசடி விவகாரம் தொடர்பாக குப்புராஜ், ஜெகநாதன் ஆகிய 2 முகவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிக வட்டி தருவதாக கூறி இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிறுவனம் 4 போலி நிறுவனங்களை உருவாக்கி சுமார் 1 லட்சம் பேரிடமிருந்து 6000 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளது. இது விதி முறைகளுக்கு மீறி வசூல் செய்த காரணத்தால் இந்த விவகாரம் தொடர்பாக அதிரடியாக பொருளாதார குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தி, வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்த இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சரவணா குமார் என்பவரிடம் முதற்கட்டமாக முகவர் என்ற அடிப்படையில் கைது செய்தனர்.