சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 800 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இம்முறை வார விடுமுறையையொட்டி சுதந்திர தினம் வருவதால் சென்னையில் பணியாற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். 3 நாட்கள் விடுமுறையையொட்டி மக்களின் வசதிக்காக ஏற்கனவே 610 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துறை சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.