செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமை வகித்தார். வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் பொருளாளர் சுரேஷ் கன்காரியா, கல்லூரியின் முதல்வர் முனைவர் சி.ஷாலினி, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் இரா.அருணாதேவி அகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில், தலைமை விருந்தினராக செங்கல்பட்டு வருவாய் கோட்ட அலுவலர் சஜீவனா, தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் பிரவீன் குமார் டாட்டியா ஆகியோர் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவோற்று வாழ்த்தி பேசினர். முன்னதாக, கல்லூரியின் தாளாளர் விகாஸ் சுரானா அனைவரையும் ரவேற்றார். கல்லூரியின் பொருளாளர் சுரேஷ் கன்காரியா அறிமுகம் செய்து கௌரவித்தார்.