பொன்னேரி: பொன்னேரி நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் புதியதாக கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய கூட்ட அரங்க கட்டிடம் கட்டுவதற்காக டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். பொன்னேரி நகராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய கூட்ட அரங்க கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரூ.1 கோடியில் திட்ட பணியை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார்.