டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் 5 பேர் அதிரடி மாற்றம்

சென்னை: டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் 5 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள உத்தரவில், வடசென்னை மாவட்ட மேலாளர் சத்யன், சென்னை தலைமை அலுவலக சோதனை பிரிவு மேனேஜராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட மேலாளர் செந்தில்குமார், வடசென்னை மாவட்ட மேலாளராகவும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மேலாளர் புஷ்பலதா, திருவண்ணாமலை மாவட்ட மேலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அலுவலக பணியில் இருந்த சியாம் சுந்தர் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மேலாளராகவும், விஜயா சண்முகம், கன்னியாகுமரி மாவட்ட மேலாளராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: