மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நடராஜ பிள்ளை தெரு ஜீயர் தோப்பை சேர்ந்தவர் கோமளவள்ளி(80). இவரது மகன் ரவிச்சந்திரன்(56). திருமணம் செய்து கொள்ளாத இவர், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதித்த நிலையில் இருந்த தனது தாய் கோமளவள்ளியை பார்ப்பதற்காக ரவிச்சந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன் மன்னார்குடியில் உள்ள வீட்டுக்கு வந்தார். ஒருபுறம் தனக்கும் திருமணமாகவில்லை, மறுபுறம் உடல்நிலை பாதித்த தாயை பார்த்து கொள்ள உறவினர்கள் யாரும் இல்லை என்ற ஏக்கத்தில் ரவிச்சந்திரன் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.