பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து காங். பாதயாத்திரை

புழல்: பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து,  காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை நடத்தப்பட்டது. ஒன்றிய பாஜ அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், புழல் கதிர்வேடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து பாத யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் திருவேற்காடு லயன் டி.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா பாபு, ராஜன் பர்னபாஸ் முன்னிலை வகித்தனர்.

கதிர்வேடு, செம்பியம், பெரம்பூர் சாலை, புழல், சென்னை கொல்கத்தா சாலை, காவாங்கரை, தண்டல்கழனி மற்றும் சாமியார்மடம், செங்குன்றம் பஜார், திருவள்ளூர் கூட்டு சாலை வரை பாதயாத்திரை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணாசலம், மாநில செயலாளர் சாந்தகுமார், சர்க்கிள் தலைவர்கள் கதிர், சந்திரசேகர், மாதவரம் வெங்கடேசன், சங்கர், நித்தியானந்தம், மாவட்ட முதன்மை தலைவர் புழல் குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பேத்கர், ராஜீவ் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்தனர்.

Related Stories: