சென்னை: ஓ.பன்னீர்செல்வம் டிடிவியுடன் இணைந்துவிட்டால் எங்களுக்கு தொந்தரவு இல்லாமல் போய்விடும் என்று ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ்சுடன் இணைய வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் சேர மாட்டேன் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். இப்போது டிடிவி.தினகரன் கூட்டத்தை கூட்டுவதாக செய்தியை பார்த்தேன். அதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை அழைப்பார்கள் என்று நினைக்கிறேன்.