சென்னை: இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தினார். வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் நெசவாளர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான பணியை இப்போது தொடங்கினால்தான் பெண்களுக்குள் முடிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.