திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 10 நிமிடத்தில் குண்டு வெடிக்கும்-போனில் மிரட்டல் விடுத்த போதை ஆசாமி சிக்கினார்

திருச்சி : திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 10 நிமிடத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த போசை ஆசாமியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டுறைக்கு நேற்று இரவு 10 மணி அளவில் வந்த மர்ம அழைப்பின் மறு முனையில் பேசிய நபர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10 நிமிடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்காக காவல் துறையினர் விரைந்தனர். மற்றொரு பக்கம் பெறப்பட்ட தகவலின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் பேசிய நபர் மது போதையில் நான் அப்படி பேசவில்லை, நான் முதலமைச்சருக்கு பேசுவதற்காக அழைத்தேன். ஆனால் அது உங்களுக்கு வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

மேலும் எனக்கு சொந்த ஊர் திருச்சி பஞ்சப்பூர் என்றும் பஞ்சப்பூரின் பிரதான சாலையில் உள்ள பேக்கரி கடையில் தான் தற்போது நான் நின்று கொண்டிருக்கிறேன் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து பஞ்சபூர். ஐயங்கார் பேக்கரிக்கு விரைந்து சென்ற எடமலைப்பட்டி புதூர் காவல் துறையினர் போனில் பேசிய அந்த மர்ம நபரை அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் பெயர் பழனிச்சாமி என்பதும் பஞ்சப்பூரில் வசித்து வருவதும், மது போதையில் மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை தற்போது காவல் நிலையத்தில் தங்க வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக வெடிகுண்டு புரளியை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் மற்றும் துப்பறியும் மோப்ப நாயுடன் சென்று ஆனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். இதையடுத்து பேனில் பேசியவரை போலீசார் உடனை பிடித்து விசாரணையை துவங்கியதால் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்கிருந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: