செங்கல்பட்டு: மறைமலைநகரில், பழமையான கிருஷ்ணன் சிலை கண்டெடுக்கபட்டது. அங்கு, ஏராளமான பொதுமக்கள் கூடி வழிப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சின்ன செங்குன்றம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான மிக பழைமையான அய்யாகுளம் உள்ளது. இக்குளத்தை மறைமலைநகர் நகராட்சி சார்பில் தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி கரை கட்டுவதற்காக மண் அருகில் உள்ள மைதானத்தில் கொட்டப்பட்டது. அப்போது மிகப்பழமையான 4 அடி கொண்ட கிருஷ்ணன் கருங்கல் சிலை கண்டெடுக்கப்பட்டது.