சென்னை: சட்டவிரோத மின்சார பயன்பாடு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டு மின்இணைப்புகள் - 2.33 கோடி; வணிக மின் இணைப்புகள் - 36 லட்சம்; தொழிற்சாலை மின்இணைப்புகள் - 7 லட்சம்; விவசாய மின்இணைப்புகள் - 22 லட்சம்; குடிசை மின்இணைப்புகள் - 9 லட்சம்; இதர இனம் - 14 லட்சம் என மொத்தம் 3.24 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. நுகர்வோர் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தை வாரியத்திற்கு செலுத்தி விடுகின்றனர். இந்நிலையில் சில இடங்களில் சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருவது அவ்வப்போது அதிகாரிகள் நடத்தும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோத மின்சார பயன்பாடு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகாருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.