கருணாநிதி நினைவு நாள்: கேரள முதல்வர் பினராய் விஜயன் தமிழில் டுவீட்

சென்னை: கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள  முதல்வர் பினராய் விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். கலைஞர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,‘‘திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: