கலைஞர் நினைவுநாள் வைகோ இன்று புகழஞ்சலி செலுத்துகிறார்

சென்னை: கலைஞர் நினைவுநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வைகோ இன்று புகழஞ்சலி செலுத்துகிறார். மதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று (ஞாயிறு) காலை 10 மணிக்கு, தலைமை நிலையம் தாயகத்திலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள கலைஞரின் நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழஞ்சலி செலுத்துகிறார். எனவே சென்னை மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகளும், முன்னணி தோழர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: