சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2ம் ஆண்டையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதை தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 74.92% பேருக்கு பரிசோதனையும், 83,23,723 பேருக்கு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டு உள்ளது.