ராஜபாளையம்: ராஜபாளையத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒடிசா மாநிலம் மல்கானா என்ற இடத்தில் பயிற்சியின்போது உயிரிழந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாடசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (41) ராணுவ வீரர். இவரது மனைவி சண்முகபிரியா. இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டு ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் தற்போது ஒடிசா மாநிலம் மல்கானா என்ற இடத்தில் பணியாற்றி வந்தார்.