தாம்பரம்: வேலூர் மாவட்டம் காட்பாடி, பொண்ணை பகுதியை சேர்ந்தவர் அமுதா (26). இவர் குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி, செவிலியராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜய் ரமேஷ் (38) என்பவர் வாட்ஸ்அப் மூலம் அமுதாவிற்கு அறிமுகமானார். இவர், தான் சிங்கப்பூரில் வேலை செய்வதாகவும், யாருக்காவது வெளிநாட்டில் வேலை வேண்டுமானால், வாங்கி தருகிறேன், எனவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அமுதா, தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்குமா, என கேட்டுள்ளார். அதற்கு அஜய் ரமேஷ், ‘‘அதிக சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது,’’என கூறியுள்ளார். இதற்காக கமிஷனாக ரூ.50 ஆயிரத்தை கூகுல் பே மூலம் அஜய் ரமேசுக்கு கொடுத்துள்ளார். பின்னர், அமுதாவின் நண்பர்களான ராஜேஷ், சரஸ்வதி, மற்றொரு ராஜேஷ் ஆகியோரிடமும் ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.