சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநில தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் பொற்கால ஆட்சியில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி, மாற்றுத் திறனாளிகள் என பெயர் சூட்டினார். அவர்களுக்கு தனி நலவாரியம், தனித் துறையினை அமைத்து, அத்துறையினை தனது நேரடி கட்டுப்பாட்டில் தனி அமைச்சகம் கொண்டு வந்தார். அத்துடன் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பஸ்களில் கட்டணச் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார்.