பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இல்லங்களில் தேசிய கொடி ஏற்றுவோம் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இந்திய தேசிய கொடியை ஏற்றுங்கள். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்று நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்தாலும், தியாகத்தாலும் கிடைத்தது.

தமாகா சார்பாக 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வருகிற 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரதமர் வேண்டுகோளின்படி நமது தேசிய கொடியை அனைவரது இல்லங்களிலும் பறக்கவிட்டு நமது உள்ளத்திலும், இல்லத்திலும் உள்ள தேசப் பற்றினை பறைசாற்றுவோம். நமது ஒற்றுமையை உறுதிப்படுத்துவோம்’ என  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: