சென்னை: சென்னை மதுரவாயலில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று, அடி வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, தப்பியோடிய பூசாரியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் அடுத்த கந்தசாமிநகர், 5வது தெருவைச் சேர்ந்த சந்திரசேகர். இவர் அதே பகுதியை சேர்ந்த அம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். அந்த கோவிலுக்கு தனது 14 வயது மகளுடன் சென்ற பெண்ணிடம் அவரது மகளுக்கு சுற்றிப்போட வேண்டும் என பூசாரி சந்திரசேகர் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பூசாரி வீட்டிற்கு தனது மகளை அழைத்துச் சென்ற பெற்றோர், சிறுமிக்கு சுற்றிப்போட்டு அவரது வீட்டிலேயே தங்கியதாக கூறப்படுகிறது.