பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் தொடர் கனமழையால் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்களம், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பாகவே இந்த பகுதியில் நெல் அறுவடை பணிகளை துவங்கிய நிலையில், கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால் மேற்கொண்டு அறுவடை பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.