சென்னை: தமிழகம் முழுவதும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 12 டிஎஸ்பிக்களுக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள உத்தரவு: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஞான ரவி தங்கத்துரை தேனி மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், சண்முகம் சேலம் சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், சசிகுமார் ஈரோடு அதிரடிப்படை டிஎஸ்பியாகவும், ராஜபாண்டியன் கோவை மாவட்டம் பேரூர் டிஎஸ்பியாகவும், சீனிவாசன், சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், குமார் கோவைபுதூர் உதவி கமாண்டன்ட்டாகவும், தமிழ்மணி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாகவும், வெற்றிச்செல்வன், கோவை குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.