சென்னை: நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம் செல்லூர் சூரியராஜபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). இவர் சென்னை ஆயுதப்படையின் 29வது பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த மாதம் 13ம் தேதி முதல் பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. வழக்கம் போல் நேற்று காலை 10 மணிக்கு பாதுகாப்பு பணிக்கு வந்த செந்தில்குமார், சக காவலர்களிடமும் சரியாக பேசாமல் பணியில் ஈடுபட்டிருந்தார். பிறகு மணி 12.24 மணிக்கு செந்தில் குமார் தனது எஸ்எல்ஆர் வகையை சேர்ந்த துப்பாக்கியுடன் விளையாட்டு அரங்கில் உள்ள கழிவறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் கழிவறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.